வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள புதுப்பேட்டையில் மோகன் என்பவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் நேற்று (நவ. 19) கே.வி. குப்பம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்குள் ஏற்ற முயற்சித்தார். அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்தார்.
அச்சமயம் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள், மோகனுக்கு உதவுவது போல் நடித்து சுமார் 4 லட்சம் மதிப்பிலான கேமரா, லென்ஸ் வைத்திருந்த பையை பறித்துச்சென்றனர். உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட மோகன் தனது இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்தார். இருப்பினும் இளைஞர்களை பிடிக்க முடியவில்லை.
இது குறித்து குடியாத்தம் காவல் நிலையத்தில் மோகன் புகார் அளித்தார். அதன்பேரில் மோகனின் வீட்டுக்கு எதிரே இருந்த சிசிடிவி கேமிரா காட்சியை வைத்து காவல் துறையினர் இளைஞர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் திருட்டு!