ETV Bharat / state

நெல்லையில் சட்டம், ஒழுங்குப் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் - காவல் ஆணையர்

author img

By

Published : Feb 23, 2021, 6:21 AM IST

நெல்லை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றிய தீபக் டாமோர் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக அன்பு நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

காவல் ஆணையர் அன்பு
காவல் ஆணையர் அன்பு

புதிய காவல் ஆணையராகப் பொறுப்பேற்க அலுவலகம் வந்த ஐபிஎஸ் அலுவலர் அன்பை சக அலுவலர்கள் வரவேற்று அணிவகுப்பு மரியாதை நடத்தினர்.

காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அன்பு பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில், ”நெல்லை மாநகரில் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன்.

பொதுமக்கள் அச்சமின்றி எங்களைத் தொடர்புகொள்ளலாம். தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக சக அலுவலர்களுடன் கலந்தாலோசித்து அச்சமின்றி தேர்தல் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கட்சிக்கு விசுவாசமா இருங்க? - நாராயணசாமி வேதனை

புதிய காவல் ஆணையராகப் பொறுப்பேற்க அலுவலகம் வந்த ஐபிஎஸ் அலுவலர் அன்பை சக அலுவலர்கள் வரவேற்று அணிவகுப்பு மரியாதை நடத்தினர்.

காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அன்பு பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில், ”நெல்லை மாநகரில் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன்.

பொதுமக்கள் அச்சமின்றி எங்களைத் தொடர்புகொள்ளலாம். தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக சக அலுவலர்களுடன் கலந்தாலோசித்து அச்சமின்றி தேர்தல் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கட்சிக்கு விசுவாசமா இருங்க? - நாராயணசாமி வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.