சாதி சான்றிதழில் டி.என்.சி. என்று இருந்தை டி.என்.டி. என்று மாற்ற சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக போராடிவந்த நிலையில், 2019ஆம் ஆண்டு டி.என்.டி. சான்றை தமிழ்நாடு அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு ரோகிணி கமிஷன் ஒன்றை ஏற்படுத்தி டி.என்.டி.க்கான சலுகை, இடஒதுக்கீடு என்ன என்று அறிக்கை தாக்கல் செய்ய கோரியது. ஆனால் ரோகிணி கமிஷன் ஏற்கனவே மூன்று மாதங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் மேலும் மூன்று மாதங்கள் கேட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சீர்மரபினர் சார்பில் ஓ.பி.சி.யில் ஒன்பது சதவீகிதம் இடஒதுக்கீடு வேண்டும், ரோகிணி கமிஷன் உடனே அறிக்கையை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். அப்போது உத்தமபாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இட ஒதுக்கிடு வழங்கக் கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட சீர்மரபினர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'இலவச மின்சாரத்தை ரத்து செய்யதால் போராட்டம் வெடிக்கும்' - விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை