கரோனா வைரஸ் நோய் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் மலை மீது அமைந்துள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்.
இத்திருக்கோயிலில் உலக மக்கள் நோய்த் தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க 'தன்வந்திரியாகம்' நடைபெற்றது. இந்த யாகம் வளர்க்கப்பட்டு யாகத்தில் பல்வேறு மூலிகைப் பொருள்கள் இடப்பட்டு சிறப்பு பூஜைகளும், அதனையடுத்து மகா தீபாராதனையும் நடைபெற்றன.
ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருக்கோயில் செயல் அலுவலர், பணியாளர்கள் உள்பட சிலர் மட்டும் இந்த யாகத்தில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: குமரியில் உயிரிழந்த மூவருக்கும் கரோனா தொற்று இல்லை