மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கஞ்சா வாங்குவதற்காக கோயில் உண்டியலை உடைத்து திருடியுள்ளனர்.
திருட்டில் ஈடுபட்ட சிறுவர்களை பிடித்த போலீசார், அந்த சிறுவர்களிடம் விசாரிக்கையில், சீர்காழி அருகே செம்மங்குடி பகுதியிலுள்ள காட்டு கோயிலில் சாமியின் தாலி மற்றும் உண்டியலை எடுத்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சீர்காழி அரசு மருத்துவமனை அருகே தட்சன் தெருவிற்கு வரும் விக்கி, அரவிந்தன் என்ற இளைஞர்களிடம் அதனை கொடுப்பார்கள் என்றும், பணத்தை கொடுத்தவுடன் அவர்கள் கஞ்சா பொட்டலங்களை தருவார்கள் என்றும் சிறுவர்கள் கூறியுள்ளனர்.
சிறுவர்கள் கூறியவற்றை காணொலியாக பதிவு செய்து போலீசார் சமூக வலைதலங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை - வெளியான சிசிடிவி காட்சி