தமிழ்நாட்டில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வருகை தந்தனர். இவர்கள் நள்ளிரவு முதலே தேர்வு நடைபெறும் இடத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
போட்டியில் பங்கேற்கும் 700 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய 8 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.