முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப் பணிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்திலும் இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூரை அடுத்த வாங்கல் ஊராட்சி, நன்னியூர் ஊராட்சி, வேட்டமங்கலம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளான பசுபதிபாளையம், சேமங்கி உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய வாய்க்கால்கள் அனைத்தையும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் மூலம் அப்பகுதியில் இருக்கக்கூடிய அணைக்கட்டு சீரமைப்பு, தூர்வாருதல் போன்ற பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அதன்பின் ஆய்வு மேற்கொண்டு அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு பணிகள் முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'அரசைக் கண்டு ஸ்டாலின் அஞ்சுகிறார்' - அமைச்சர் கடம்பூர் ராஜு