கோயம்புத்தூர்: கோவையில் உள்ள கல்வி நிலையங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சாகா பயிற்சியை நடத்திவருகிறது. இதற்குப் பல்வேறு திராவிட கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 30) விளாங்குறிச்சி சாலையில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சாகா பயிற்சி நடைபெற்றது.
இதனையறிந்து பள்ளி முன்பு திரண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், பல்வேறு பெரியாரிய கருத்தியல் கொண்ட அமைப்புகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர், ஆர்எஸ்எஸ்-யின் சாகா பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எதிராக முழங்கங்களை எழுப்பினர்.
பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Jewelry loan waiver: அரசு ஊழியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது - ஐ. பெரியசாமி