ETV Bharat / state

ஊரடங்கை மீறியதால் சுமார் 2 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

author img

By

Published : Apr 20, 2020, 5:03 PM IST

சென்னை: ஊரடங்கை மீறியதால் கடந்த 27 நாள்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

police
police

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்து அவர்களைக் காவல் துறையினர் கட்டுப்படுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது முதல் தற்போது வரை (27 நாள்கள்) 2 லட்சத்து 35 ஆயிரத்து 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2 லட்சத்து 50 ஆயிரத்து 230 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 1 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 894 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 2 லட்சத்து 11 ஆயிரத்து 467 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்து அவர்களைக் காவல் துறையினர் கட்டுப்படுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது முதல் தற்போது வரை (27 நாள்கள்) 2 லட்சத்து 35 ஆயிரத்து 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2 லட்சத்து 50 ஆயிரத்து 230 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 1 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 894 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 2 லட்சத்து 11 ஆயிரத்து 467 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உ.பி.யில் பெண் குழந்தை கொலை - தந்தை கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.