ETV Bharat / state

தற்காலிக மருத்துவப் பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு கோரிக்கை

author img

By

Published : Jul 30, 2021, 3:50 PM IST

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தற்காலிக பணியிடங்கள்
தற்காலிக பணியிடங்கள்

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மருத்துவத் துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுவருவது மருத்துவப் பணியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கடந்த ஜூன் 28ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், "கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையைப் போக்க ஆறு மாதத்திற்குத் தற்காலிகமாகப் பணியிடங்கள் நிரப்பப்படும். வருங்காலத்தில் நிரந்தரப்படுத்த உரிமை கோரக் கூடாது. அவர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், 550 மருந்தாளுநர் பணியிடங்களில் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் செவிலியர், ஆய்வக உதவியாளர்கள், மயக்க மருந்தியல் நிபுணர்கள், இஜிசி தொழில்நுட்பப் பணியாளர்கள், பல்துறை மருத்துவப் பணியாளர், ரேடியோகிராஃபர் ஆகிய பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன.

தற்காலிக பணியிடங்கள்
தற்காலிகப் பணியிடங்கள்

சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி, திருவல்லிக்கேணியில் உள்ள சமூக மகப்பேறியியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனைக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை நிபந்தனைகளுடன் வெளியிட்டுள்ளார். அதில், "நர்சிங், மருந்தாளுநர், ஆய்வக உதவியாளர், மயக்க மருந்தியல் தொழில்நுட்புனர், இஜிசி தொழில் நுட்புனர், மருத்துவமனை பல்துறை பணியாளர், ரேடியாேகிராஃபர் ஆகிய பணியிடங்களில் 134 பணியாளர்களை நியமனம் செய்ய உள்ளனர். இதற்கு வரும் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மருத்துவப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறும்போது, "திமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே பணியில் உள்ள ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதுபோல் அவுட்சோர்சிங் முறையில் தேர்வு செய்யாமல் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

மருத்துவப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்

மேலும் தற்காலிக செவிலியர் பணிக்கு விண்ணப்பித்த பெண்கள் கூறும்போது, "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைவரையும் நிரந்தரம் செய்வார் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பணிக்கு விண்ணப்பித்துள்ளோம்.

தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் தங்களுக்குத் தற்காலிகப் பணி கிடைத்தாலும், பின்னர் நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு அலகுத் தேர்வு எப்போது?

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மருத்துவத் துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுவருவது மருத்துவப் பணியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கடந்த ஜூன் 28ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், "கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையைப் போக்க ஆறு மாதத்திற்குத் தற்காலிகமாகப் பணியிடங்கள் நிரப்பப்படும். வருங்காலத்தில் நிரந்தரப்படுத்த உரிமை கோரக் கூடாது. அவர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், 550 மருந்தாளுநர் பணியிடங்களில் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் செவிலியர், ஆய்வக உதவியாளர்கள், மயக்க மருந்தியல் நிபுணர்கள், இஜிசி தொழில்நுட்பப் பணியாளர்கள், பல்துறை மருத்துவப் பணியாளர், ரேடியோகிராஃபர் ஆகிய பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன.

தற்காலிக பணியிடங்கள்
தற்காலிகப் பணியிடங்கள்

சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி, திருவல்லிக்கேணியில் உள்ள சமூக மகப்பேறியியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனைக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை நிபந்தனைகளுடன் வெளியிட்டுள்ளார். அதில், "நர்சிங், மருந்தாளுநர், ஆய்வக உதவியாளர், மயக்க மருந்தியல் தொழில்நுட்புனர், இஜிசி தொழில் நுட்புனர், மருத்துவமனை பல்துறை பணியாளர், ரேடியாேகிராஃபர் ஆகிய பணியிடங்களில் 134 பணியாளர்களை நியமனம் செய்ய உள்ளனர். இதற்கு வரும் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மருத்துவப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறும்போது, "திமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே பணியில் உள்ள ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதுபோல் அவுட்சோர்சிங் முறையில் தேர்வு செய்யாமல் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

மருத்துவப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்

மேலும் தற்காலிக செவிலியர் பணிக்கு விண்ணப்பித்த பெண்கள் கூறும்போது, "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைவரையும் நிரந்தரம் செய்வார் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பணிக்கு விண்ணப்பித்துள்ளோம்.

தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் தங்களுக்குத் தற்காலிகப் பணி கிடைத்தாலும், பின்னர் நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு அலகுத் தேர்வு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.