அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆறு மாதமாக கோவிட்-19 வைரஸ் காரணமாக பொது மக்களிடம் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படாமல் மக்கள் மனுவை பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.
இந்நிலையில் அங்கு கடந்த இரண்டு வாரங்களாக காணொலி மூலமும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் வயதானவர்கள் ஆன்லைன் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சரியாக பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மனுவை நேராக கொடுக்க முடியாததால் தங்களது குறையை கூற முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.