நாராயணர் மனுவாக தோன்றி வைகுண்டராக நிகழ்த்திய அற்புதங்களை வரலாறாக எடுத்துச் சொல்லும் படமாக ‘ஒரு குடைக்குள்’ உருவாகியுள்ளது. கலி என்னும் மாயையிலிருந்து, மக்களை தர்மயுக வாழ்விற்கு அழைத்துச் செல்ல வந்த கடவுளின் கதை இது.
வைகுண்டராக ஆனந்த் நடித்துள்ளார். பக்தையாக மேக்னாராஜ் நடித்துள்ளார். அவதார சிறுவனாக சிவ தினேஷ் அறிமுகமாகிறார். இவர்களுடன் நிரோஷா, கருத்தம்மா ராஜஶ்ரீ, இளவரசு, இராஜேந்திரநாத், ரவிராகுல், சூசன் ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி உதயகுமார் இயக்கியுள்ளார். படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் பாடல்கள் இசையமைப்பாளர் தேவா ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டன.
படத்தில் இசையமைப்பாளர் தேவா வைகுண்டநாதருக்கு தனது காந்தக் குரலில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். ‘ஒரு குடைக்குள்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.