கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள சர்வதேச நாடுகள் தினறிவரும் நிலையில் பின்தங்கிய நாடுகளைக் கொண்ட கண்டம் தற்போது பெருந்தொற்றின் தீவிரத்தை உணரத்தொடங்கியுள்ளது.
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கரோனா பரவியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 9 லட்சத்து 74 ஆயிரத்து 628 பேர் அங்கு கோவிட் - 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்து 640 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக காங்கோ நாட்டின் முன்னாள் அதிபர், சோமாலியா நாட்டின் முன்னாள் பிரதமர் ஆகியோரும் பெருந்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அங்கு கரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்கியுள்ளதால், நோய் கட்டுப்பாடு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் செயலில் உலக சுகாதார அமைப்பு களமிறங்கியுள்ளது. ஆப்ரிக்க நாடுகளின் சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் பின்தங்கியுள்ளதால், பாதிப்பின் தாக்கம் வெகுவாக இருக்கும் என நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மனித தவறுகளால் நிகழ்த்தப்பட்ட பெரும் வெடி விபத்துகள்!