ETV Bharat / city

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ மருத்துவ மேற்படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு!

author img

By

Published : Nov 9, 2020, 5:12 PM IST

சென்னை: சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அரசு மருத்துவர்கள் எம். செய்யது பக்ரூதீன், ஜி. குமரவேல் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனு தாரர்கள் தரப்பில், அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அந்தப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.

இது குறித்து மத்திய அரசு தரப்பில், இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எதிர் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்தத் தொடர்புமில்லை என வாதிட்டனர்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த 7ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை பதிவுசெய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு குழு: சீர்மரபினர் நல சங்கம் சார்பில் மனு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அரசு மருத்துவர்கள் எம். செய்யது பக்ரூதீன், ஜி. குமரவேல் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனு தாரர்கள் தரப்பில், அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அந்தப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.

இது குறித்து மத்திய அரசு தரப்பில், இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எதிர் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்தத் தொடர்புமில்லை என வாதிட்டனர்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த 7ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை பதிவுசெய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு குழு: சீர்மரபினர் நல சங்கம் சார்பில் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.