பக்ரைனிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று இரவு (ஜூன் 23)சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் 18 பெண்கள், 6 சிறுவா்கள் உட்பட 177 போ் வந்தனா். அவா்களுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 145 போ் இலவச தங்குமிடமான மேலக்கோட்டையூா் விஐடிக்கும், 32 போ் கட்டணம் செலுத்தும் தங்குமிடமான சென்னை நகர விடுதிக்கும் அனுப்பப்பட்டனா்.
மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று இரவு (ஜூன் 23) வந்தது. அதில் 34 பெண்கள்,10 சிறுவா்கள் உட்பட 173 போ் வந்தனா். அவா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 113 போ் விஐடிக்கும் 59 போ் தங்கும் விடுதிக்கும் அனுப்பப்பட்டனா். விமானத்திலேயே உயிரிழந்த ஒருவா் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் 29 பெண்கள், 4 சிறுவா்கள் உட்பட 180 போ் வந்தனா். அவா்கள் மருத்துவ பரிசோதனை முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 95 போ் விஐடி விடுதிக்கும், 85 போ் தங்கும் விடுதிக்கும் அனுப்பப்பட்டனா்.
ரஷ்யாவில் உள்ள அா்மெனியா நகரிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் இன்று அதிகாலை சென்னை வந்தது. அதில் 49 பெண்கள் உட்பட 78 பேர் வந்தனா். அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 51 போ் இலவச தங்கும் இடங்கள் கேட்டனா். ஆனால், விஐடியில் இடம் இல்லாததால், அவா்கள் மறைமலைநகரில் உள்ள ஒரு தனியாா் விடுதிக்கு அனுப்பப்பட்டனா். 27 போ் கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான சென்னை நகர விடுதிகளுக்கு அனுப்பப்பட்டனா்.