ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா(Manoj Sinha), ஜம்முவில் நடைபெற்ற வர்த்தக கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார். நிகழ்வில் பேசிய துணை நிலை ஆளுநர், "ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சிறந்த மாற்றத்தைக் கண்டுள்ளது.
இந்திய அரசு முறையான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இல்லாத சூழலை உருவாக்குவோம். சில மோசமான சக்திகள் அமைதி சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ளன.
அதை அரசு முறியடித்து அமைதியை நிலைநிறுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார். விழாவில் மாநில வழக்கறிஞர் சங்கத்தின் பிரதிநிதிகள் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து தங்களின் குறைகளை முறையிட்டனர். இந்த குறைகளை அரசு விரைந்து சீர் செய்யும் என அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ஓட்டைகள் மூலம் குற்றவாளி தப்பிக்க சட்டம் அனுமதிக்காது - போக்சோ வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு