மகாராஷ்டிரா மாநிலம் கார் பகுதியில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை உயிர்பலி பற்றிய தகவல் ஏதும் வெளிவரவில்லை. இன்று மதியம் 2.20 மணிக்கு விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இடிந்து விழுந்த கட்டடங்களை சீரமைக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர். கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவது மும்பையில் தொடர் கதையாகியுள்ளது. இதனால், மும்பை மாநகராட்சி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.