தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2022, 5:48 PM IST

ETV Bharat / videos

Video: 40 அடி ஆழக்கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்!

தேனி: போடிநாயக்கனூர் அருகே உப்புக்கோட்டை கிராமத்தில் இருளப்ப பிள்ளை என்பவருக்குச் சொந்தமான பசு அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது‌. அப்பொழுது இங்குள்ள சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் பசு எதிர்பாராத விதமாக விழுந்தது. இதையடுத்து இருளப்ப பிள்ளை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு மீட்புப் பணித்துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கயிற்றின் மூலம் பசு மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details