90 வயது தாயை வீட்டை விட்டு விரட்டிய பிள்ளைகள் - ஒருவேளை உணவுக்கு கையேந்தும் அவலம்!
மயிலாடுதுறை அருகே வாணாதிராஜபுரத்தை சேர்ந்தவர் தாவூத்பீவி (90). இந்த மூதாட்டி கணவனை இழந்த நிலையில் தன் இளைய மகன் அசரப்அலியுடன் வசித்துவந்துள்ளார். மகன் வெளிநாடு செல்லவே, மருமகள் கடந்த மாதம் வீட்டைவிட்டு விரட்டியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மழை பெய்த நேரத்தில் மூதாட்டியை வீட்டைவிட்டு வெளியேற்றி வாசற்கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். அக்கம்பக்கத்தினர் மூதாட்டியின் பரிதாப நிலையறிந்த உதவி செய்து, உணவளித்து வருகின்றனர்.