சிவகங்கை நகரின் பிள்ளைகள் வயல் காளியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் நடக்கும் பூச்சொரிதல் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பல வகையான பூக்களை சமர்ப்பித்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டு இவ்விழா கொடியேற்றத்துடன் நேற்று (ஜூலை 8) தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.