திம்பம் மலைப்பகுதியில் கனமழை..பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீர்..
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. கனமழை காரணமாக ஓடைகள் மற்றும் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.