கோகுலாஷ்டமியை முன்னிட்டு தி.மலையில் வழுக்கு மரம் ஏறும் போட்டி
திருவண்ணாமலை நகரில் உள்ள கிருஷ்ணன் தெருவில், கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு 57ஆம் ஆண்டு வழுக்குமரம் ஏறுதல் மற்றும் உறி அடித்தல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த உறி அடித்தல் திருவிழாவில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, 31 அடி உயரம் கொண்ட வழுக்கு மரத்தில் ஏறி உறியடித்தனர்.