கரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர்
தஞ்சாவூர்: தளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய மூதாட்டியின் உறவினர்கள் மதுக்கூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அமைப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்தனர். இதுவரை மதுக்கூர் தமுமுகவினர், மூதாட்டி உள்பட கரோனா தொற்றால் உயிரிழந்த 22 பேரின் உடல்களை அடக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.