குன்னூரில் ஆர்வத்துடன் சிலம்பம் கற்றுக்கொள்ளும் மாணவர்கள்
கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு உபதலைப் பகுதியில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் பாரம்பரிய கலையான சிலம்பக் கலையை கற்றுக்கொள்வது வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்வத்துடன் சிலம்பம் கற்று வருபவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று நீலகிரி மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம் என்கின்றனர்.