தொடர் கனமழை : பிளவக்கல் அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் மூன்று அடி உயர்ந்துள்ளது. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டமானது 30 அடியாக இருந்த நிலையில், தற்போது 33 அடியை எட்டியுள்ளது. இதனால் இந்த அணையை நம்பியுள்ள விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.