நாகை: சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வீடு ஒன்றில், நள்ளிரவில் நுழைந்த வடமாநில இளைஞர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஐந்து இருசக்கர வாகனங்களில் அடுத்தடுத்து பெட்ரோலை திருடிச் செல்கிறார். இச்சம்பவம் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது வைரலாகி வருகிறது.