சென்னை: நாளை (ஆகஸ்ட்15) 74ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் சென்னை உள்நாட்டு முனையம், பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வண்ண விளக்குகளால் விமான நிலையம் மிளிர்வதை பயணிகள் தங்கள் அழைபேசியில் புகைப்படம் எடுத்தனர். இந்த வருடம் கரோனா வைரஸ் பாதிப்பால் விமான நிலையத்தில் சில முக்கிய அலுவலர்கள் மட்டுமே கலந்து கொண்டு கொடி ஏற்ற உள்ளனர். எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் சென்னை விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.