உள்ளூரிலேயே ஐயப்பன் தரிசனம்: சபரிமலைக்குச் சென்றுவந்த மனநிறைவில் பக்தர்கள்!
Published : Dec 31, 2020, 10:33 PM IST
Published : Dec 31, 2020, 10:33 PM IST
|Updated : Jan 1, 2021, 6:17 PM IST
மயிலாடுதுறை: சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள் கரோனா விதிமுறைகளால் சபரி மலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களது குறையை நிவர்த்திசெய்யும் விதமாக மயிலாடுதுறையிலேயே மரத்தினாலான 18 படிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் படியேறிச் சென்று ஐயப்பனை வழிபடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், 18 படிகளில் ஏறி ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றுவந்த மனநிறைவை அடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Jan 1, 2021, 6:17 PM IST