தமிழ்நாடு

tamil nadu

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

ETV Bharat / videos

ரூ.3 கோடியைத் தாண்டிய சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை!

By

Published : Jul 26, 2023, 2:11 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜுலை மாத உண்டியல் வருமானம் ரூபாய் 3.09 கோடி கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி, ஜூலை மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை என்னும் பணியானது கோயில் வசந்த மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. 

இந்த காணிக்கை எண்ணும் பணி அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக்குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக் குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

இதில் 3 கோடியே 9 லட்சத்து 71 ஆயிரத்து 872 ரூபாயும், தங்கம் 1,900 கிராமும், வெள்ளி 29,000 கிராமும், 552 வெளிநாட்டு ரூபாயும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details