தமிழ்நாடு

tamil nadu

வேலூர் அணைக்கட்டு மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 4500 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் போலீசார் அழித்தனர்

By

Published : Apr 28, 2023, 3:27 PM IST

ETV Bharat / videos

வேலூர் அணைக்கட்டு மலைப்பகுதிகளில் 4500 லிட்டர் கள்ளச் சாராய ஊறல்கள் அழிப்பு

வேலூர்:மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் சாராயம் குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் அடுத்த அணைக்கட்டு அருகே உள்ள மலைப்பகுதிகளான அல்லேறி, மாமரத்து கொல்லை ஆகியப் பகுதிகளில் சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் T.செந்தில்குமார் தலைமையில் கள்ளச் சாராய ஊறல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

வேலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் பேபி, குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் அடங்கிய போலீசார் குழுவினர் மலைப்பகுதிகளில் நடத்திய சாராய வேட்டையில் காட்டுப்பகுதியில் நடுவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4500 லிட்டர் கள்ளச் சாராய ஊறல்கள் மற்றும் அடுப்பு, பேரல்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்து அழித்தனர்.

மேலும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் அப்பகுதி மக்களுக்கு கள்ளச்சாராயம் காய்ச்சக் கூடாது எனவும், அதனை மீறி யாராவது கள்ளச்சாராயம் காய்ச்சினால் அதனைத் தடுக்க வேண்டும் எனவும் கூறினர். மேலும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details