கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா!
ஈரோடு: கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை, 3:40மணிக்கு, கஸ்தூரி அரங்கநாதருக்கு திருமஞ்சனம், மஹா தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, 4.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் நந்தகுமார் முன்னின்று வாசல் கதவை திறந்தார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்துாரி அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST