திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட 48 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 19) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 350 வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துச் செல்கின்றனர். ஆவடி மாநகராட்சி 26ஆவது வார்டு திருமுல்லைவாயல் பகுதிக்குள்பட்ட தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஒரே வீல் சேர் இருப்பதால் மாற்றுத் திறனாளிகள் அசவுகரியம் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர். வாக்குச்சாவடியின் எல்லைப்பகுதியான 100 மீட்டருக்கு தொலைவிலிருந்து வீல் சேர் வசதி ஏற்பாடுசெய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Polling booth in avadi