அதிமுக - திமுக இடையே மோதல்: வேலூரில் பரபரப்பு
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45ஆவது வார்டு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதிமுகவினர் வாக்குச்சாவடி அருகே வந்ததாகவும், திமுகவினரும் வாக்குச்சாவடி அருகே விதியை மீறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் இரு கட்சியினரும் மாறி மாறி குற்றஞ்சாட்டி மோதலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் வெளியேற்றினர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST