வாழையில் தேன் குடிக்கும் அணில்!
ஈரோடு: பவானிசாகர் பகுதியில் வாழைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது அறுவடைக்குத் தயாரான வாழை மரத்தில் பூக்கள் பூத்துள்ளன. வாழைப் பூக்களில் தேன் நிறைந்து காணப்படுதால், அதனை உட்கொள்ள தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் வந்து செல்வது இயல்பு. இந்நிலையில் ஒரு வாழை மரத்தில் உள்ள பூவில், அணில் தேனை குடிக்கும் அபூர்வ நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. தேனீக்கள் மட்டுமே தேனை உறிஞ்சி சேகரித்து செல்வதைப் பார்த்திருக்கிறோம். பொதுவாக அணில்கள் பழங்கள், விதைகளை உட்கொள்ளும் நிலையில், இக்காணொலியில் இடம்பெற்ற அணில் தேன் குடிக்கிறது என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.