மேற்கு வங்க ஷூ தொழிற்சாலையில் பெரும் தீ
கொல்கத்தாவின் டாப்சியாவில் உள்ள காலணி (ஷூ) உற்பத்தித் தொழிற்சாலையில் இன்று(ஏப். 3) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கோடிக்கணக்கான மூலப்பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.