மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் கோவிட் மூன்றாம் அலையில் இளவயதினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அந்நாட்டின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (Andres Manuel Lopez Obrador) திங்கள்கிழமை (ஜூலை 12) செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவிட் மூன்றாம் அலையில் இளவயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே நீங்கள் அதிக பாதுகாப்பாக இருத்தல் அவசியம்” என்றார்.
இளையோர் பாதிப்பு
மெக்சிகோவை பொறுத்தமட்டில் எளிதில் நோய் தாக்கும் நபர்களை காட்டிலும், பதின்ம மற்றும் இளவயதினர் அதிகமானோர் கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் மெக்சிகோவில் கரோனா மூன்றாவது அலை தாக்கியது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
29 சதவீதம் அதிகரிப்பு
கரோனா பாதிப்பு அதிகரிப்பு வைரஸின் டெல்டா மாறுபாட்டின் வருகையால் அல்ல, மெக்சிகோவில் கடந்த வாரம் கரோனா வைரஸ் மூன்றாவது அலை பாதிப்பு ஏற்பட்டது.