டெல்லி: சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆதர் பூனவல்லா வியாழக்கிழமை (நவ.19) கூறுகையில், “ஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்களுக்கு 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் கிடைத்துவிடும்.
இது அனைத்து மக்களுக்கும் ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும். இதன் விலை ரூ.1000. அனைத்து இந்தியர்களுக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் கோவிட் தடுப்பூசி கிடைத்துவிடும்” என்றார்.
இதையடுத்து கோவிட் தடுப்பூசியின் விலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, அது அமெரிக்க டாலருக்கு 3-4 என நிர்ணயிக்கப்படும். இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.1000 ஆக இருக்கும் என்றார்.