திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அலங்காரம் மாசிலாமணி என்பவரின் மகன் அருச்சன்கார் (23). பொறியியல் பட்டதாரியான இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்க தனது நண்பர்களுடன் வந்தார்.
இந்நிலையில், நேற்று (மார்ச்2) குளிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலின் எதிரே உள்ள தாமரை குளத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். குளத்தில் ஒருவர் பின் ஒருவராக இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இளைஞர் அருச்சன்கார் குளத்திற்குள் தவறி விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து குளத்தில் தேடினார்கள். ஆனால் அவர்களால் இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை.