தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 14, 2021, 4:46 PM IST

ETV Bharat / state

பட்டாசு ஆலை வெடி விபத்து:  மேலும் 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஆலை போர்மேன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Virudhunagar Firecracker factory blast: Death toll rises to 3
Virudhunagar Firecracker factory blast: Death toll rises to 3

விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் தீக்குச்சி மத்தாப்பு தயாரிக்கும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குருமூர்த்தி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (50), வீராச்சாமி (64), முத்தல்லாபுரத்தைச் சேர்ந்த நடராஜன் (50), ஆமத்தூர் புதுராஜா (52) ஆகிய நான்கு தொழிலாளர்களும் படுகாயமடைந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள நவீன தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் ஆமத்தூர் புது ராஜா , வீராச்சாமி, நடராஜன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர். இதனிடையே விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் விசாகன், ஆலை போர்மேன் துரைராஜ் ஆகிய இருவர் மீது கவனக்குறைவாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஆலை போர்மேன் துரைராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள விசாகனை தீவிரமாக தேடிவருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விருதுநகரில் ஐந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதுனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details