விருதுநகரில் பருவமழைக்கு முன்பாக நகராட்சி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல்வேறு பராமரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகள் சீரமைப்பு, பாதாள சாக்கடை திட்டம், நகராட்சி கட்டடங்கள் புனரமைப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவை, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமின்றி நெடுஞ்சாலைத்துறை மூலம் சீரமைக்கப்படும் சாலைகளில் பாதாள சாக்கடை திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருவதால், ராமமூர்த்தி ரோடு, ஐ.சி.ஏ காலனி மற்றும் மல்லாங்கிணறு சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் கனரக வாகனங்களால் காற்று மாசுபாடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக விருதுநகரை சேர்ந்த முருகன் கூறுகையில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழைக்காலங்கள் நெருங்கிய நிலையில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இப்பணிகளை தொடங்கியிருக்க வேண்டும். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக முழுமையடையாமல் தற்போது வரை நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது" என்றார்.
ரமேஷ் குமார் கூறுகையில், "40 ஆண்டுகளுக்கு மேலாக விருதுநகரில் வசித்து வருகிறோம். நகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணி நடப்பதால், மாற்றுப்பாதையில் வரும் வாகனங்களால் அதிகளவிலான தூசியின் காரணமாக காற்று மாசுபாடு ஏற்படுகிறது.