விருதுநகர் மாவட்ட வாள் விளையாட்டு சங்கம் நடத்தும் மாநில அளவிலான 22ஆவது வாள் விளையாட்டு போட்டிகள் விருதுநகர் நோபல் பள்ளியில் தொடங்கியது. 14 வயதிற்கு உள்பட்டவர்களான இப்போட்டி ஆண், பெண் இருபாலருக்கும் நடைபெறுகிறது.
பாயில், எப்பி, சேப்பர் என 6 பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. தனியாகவும், குழுவாகவும் இரண்டு நாள்கள் நடைபெறும் இப்போட்டிகளில் சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.