தமிழ்நாடு

tamil nadu

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத சிவகாசி சிறுமி கொலை வழக்கு குற்றவாளி

By

Published : Feb 7, 2020, 7:14 AM IST

விருதுநகர்: பாதுகாப்பு காரணங்கள், கைதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிவகாசி சிறுமி பாலியல் வழக்கில் கைதான போஜம் அலியை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.

rape accused
rape accused

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கடந்த மாதம் 21ஆம் தேதி போஜம் அலி என்ற வடமாநில இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணைக்காக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதி பரிமளா பிப்ரவரி 6ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்

பின்னர் போஜம் அலி, விசாரணை கைதியாக மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இதனிடையே நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய போஜம் அலியின் கை, கால் உள்ளிட்டவைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.

உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் போஜம் அலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details