தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 10, 2020, 10:09 PM IST

ETV Bharat / state

கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் உடல்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

male-body-restoration-in-virudhunagar
male-body-restoration-in-virudhunagar

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதி ஆத்துகடைத்தெரு பகுதியில் இருக்கும் கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் காவல் துறையினர் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை கழிவுநீர் கால்வாயிலிருந்து மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

இதையும் படிங்க: சாலையோரம் நின்றிருந்த சொகுசு வேனில் திடீர் தீ

ABOUT THE AUTHOR

...view details