வரும் பதினாறாவது சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாட்டில் அமலில் உள்ள நிலையில், கடந்த வாரம் தொடங்கிவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில், மூன்று பிரிவுகளாக 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை பணியில், பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (மார்ச்.09) மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், அழகாபுரி பகுதியில், வாகனச் சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அழகாபுரியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனத்தில், பெட்ரோல் நிலைய ஊழியரான பார்த்திபன் என்பவர் சென்றுள்ளார்.