விருதுநகர் அருகே ஆமத்தூரில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான சோனி பட்டாசு ஆலை உள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை (ஜூலை 7) வழக்கம் போல் பணிக்கு வந்த பணியாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு தயாரிப்பில் ஏற்பட்ட உராய்வால் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தவசிலிங்கபுரத்தைச் சேர்ந்த ராமகுருநாதன் என்பவர் படுகாயமடைந்தார்.
வெடி விபத்தில் ஆலை வளாகத்தில் இருந்த ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவம் நடந்த இடத்திற்க்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ராமகுருநாதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.