தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2020, 10:42 PM IST

ETV Bharat / state

விருதுநகரில் ஆயிரத்தை நெருங்கும் கரோனா; பீதியில் மக்கள்!

விருதுநகர்: இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 972ஆக உயர்ந்துள்ளது.

Corona approaching a thousand in Virudhunagar; People in panic!
Corona approaching a thousand in Virudhunagar; People in panic!

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் 886 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று மேலும் 86 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக இதுவரை மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 972 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இதுவரை 438 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 528 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இத்தொற்றின் காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மாவட்டத்தில் தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details