உதவி மக்கள் தொடர்பு அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி
விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி சுற்றுவட்டாரத்தில் தேவர்குளம், சிறுகுளம் காலனி, பராசக்தி காலனி, அம்மன் கோவில்பட்டி, மடத்துப்பட்டி, ஆணையூர், ஆலமரத்துப்பட்டி, ஆமத்தூர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 11 பேருக்கு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றிவரும் உதவி மக்கள் தொடர்பு அலுவலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உதவி மக்கள் தொடர்பு அலுவலருடன் தொடர்பில் இருந்த பல்வேறு பத்திரிக்கையாளர்களுக்கு தற்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அவர் வசித்து வந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.