தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்ஃபோனில் பேசியபடி இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செல்ஃபோனில் பேசியபடியே இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் பலமாக மோதி இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

By

Published : Mar 2, 2021, 5:48 PM IST

Road accident in Madurai Kollam highway, Road accident near Srivilliputhur highway, youngster caught accident in Madurai Kollam highway, மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து, Road accident while speaking in mobile near Srivilliputhur, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனம் விபத்து, செல்போனில் பேசியதால் இருசக்கர வாகனம் விபத்து, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டச்செய்திகள், விருதுநகர், Srivilliputhur, Virudhunagar
accident-while-riding-a-two-wheeler-as-spoken-on-a-cell-phone-near-virudhunagar

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது நத்தம்பட்டி பகுதி. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இன்று (மார்ச் 2) ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வினோத் அமல்ராஜ் என்பவர் சாலையின் ஓரம் நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டபடியே வாகனத்தை திருப்பியபோது அதே பகுதியில் தென்காசியில் இருந்து வந்த கார் அவர் மீது பலமாக மோதியதில் அவரது வலது கால் துண்டானது.

சம்பவ இடத்திற்கு வந்த நத்தம்பட்டி காவல் துறையினர் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதாயும் படிங்க: கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details