தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் கார் விபத்து - இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம்: மரக்காணம் அருகே மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Oct 5, 2020, 11:48 AM IST

Updated : Oct 5, 2020, 3:15 PM IST

கார் விபத்து
கார் விபத்து

சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (26). இவர் நேற்றிரவு தனது நண்பர்களுடன் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம், மரக்காணம் அருகே உள்ள மண்டவாய் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளியமரத்தில் மோதியது.

இவ்விபத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் காயம் ஏற்பட்ட மூன்று பேரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தவர் கைது

Last Updated : Oct 5, 2020, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details