கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் சென்னையில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இலவச பயணத்தை ஓசி என கிண்டலடிக்கும் விதமாக பேசினார்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் உயர் கல்வித்துறை அமைச்சரின் பேச்சுக்குப் பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கண்டாச்சிபுரம் வரை செல்லும் பேருந்து எண் 7, சில தினங்களுக்கு முன்னர் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது.